tamilnadu

img

ஊரடங்கு தளர்வா? நீட்டிப்பா? மாநில முதல்வர்களுடன் வரும் 27-ஆம் தேதி பிரதமர் ஆலோசனை

தில்லி 
இந்தியாவில் கொரோனவை கட்டுப்படுத்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 வரை முதல்கட்ட ஊரடங்கை கடைப்பிடித்தது. இந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் நிற்கவில்லை. தொடர்ந்து பரவியதால் மே 3-ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தியது. 

இந்நிலையில் வரும் 27 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய ஆய்வுக் கூட்டமாக இது இருக்கும் எனவும்,  ஊரடங்கு  தொடர்பான தொடர்பான விவாதம் நடைபெறும் எனவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.  
 

;