இந்தியாவில், கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 11,458 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,39,831 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,28,337 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,66,262 ஆக உள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,08,993 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிய உச்சமாக 11,458 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 386 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கோவிட்-19 வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,884 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,54,330 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,45,779 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் பரவலாக கோவிட்-19 தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் 1,01,141 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3,717 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து, தமிழகத்தில் 40,698 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 367 பேர் உயிரிழந்துள்ளனர். தில்லியில், 36,824 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,214 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 22,527 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,514 பேர் உயிரிழந்துள்ளனர்.