இந்தியாவில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
உலகம் முழுவதும் 80 நாடுகளில் கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3200 ஐ தாண்டி உள்ளது. மேலும் 92153 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ccccccமேலும், 28529 பேர் கண்காணிப்பின் கீழ் உள்ளனர் என்று அரசு உறுதிப்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தில்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக , தில்லியில் அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய தற்காலிக தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தில்லியில் அனைத்து அரசு மற்றும் தனியார் ஆரம்பப் பள்ளிகளுக்கும் நாளை முதல் மார்ச் 31 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.