tamilnadu

img

தில்லி மெட்ரோவில் 20 பேருக்கு கொரோனா...

தில்லி 
நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லியில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரைவில்லை. பரவல் வேகம் தாறுமாறாக இருந்தாலும் அம்மாநில அரசு மத்திய அரசு வழிகாட்டுதலின் படி ஊரடங்கைத் தளர்த்தியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுவரை தில்லியில் 25 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 650 பேர் பலியாகியுள்ள நிலையில், 9 ஆயிரத்து 898 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். 

இந்நிலையில் தில்லி மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி மெட்ரோ ரயிலை விரைவில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், என்.சி.ஆர் பகுதியில் வசிக்கும் 20 மெட்ரோ ஊழியர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தில்லி மெட்ரோவை மீண்டும் தொடங்குவதில் சற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.