இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ரயில் சேவைகள் வரும் 31ம் தேதிவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் பயணிகள் ரெயில் சேவை வரும் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.