புதுதில்லி:
கொரோனா நோய் பாதிப்பு மே மாதம் உச்சம் அடையும் என்றும் செப்டம்பரில் பூஜ்யமாக குறையும் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தகவல்கள் தெரிவிக்கின்றன.சர்வதேச நிறுவனமான புரோடிவிட்டியுடன் சேர்ந்து டைம்ஸ் பத்திரிகை குழுமம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
அமெரிக்கா, இத்தாலியில் நேரிட்ட பாதிப்பை அடிப்படையாக கொண்ட சதவீத மதிப்பீடு உள்ளிட்ட மூன்று மாதிரிகளை கணக்கில் கொண்டு முடிவை வெளியிட்டுள்ளது. அதில் மே மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு உயரக்கூடும் மே 22-ஆம் தேதி இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டும். மிக மோசமான சூழல் நிலவும். 30 சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படலாம். கொரோனா தொற்று ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பொருளாதார, சமூக தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸின் முன்னேற்றத்தை கணிக்க குழு மூன்று மாதிரிகளை உருவாக்கியது. ஒவ்வொரு மாதிரியும் வெவ்வேறு நிலைமைகளின் கீழ் எவ்வாறு கொரோனா பரவும் என்பதற்கான மதிப்பீட்டை வழங்கியது. நெருக்கடிக்கு அரசாங்கமும் சுகாதார உள்கட்டமைப்பும் எவ்வாறு செயல்பட முடியும் என்பதற்கான வழிகளையும் வழங்கியுள்ளன. மே 15 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், செப்டம்பர் 15- ஆம் தேதிக்குள் பாதிப்பு பூஜ்யமாக குறைய வாய்ப்பு உள்ளதாகவும், மே 30 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டால், ஜூன் மாத மத்தியில் பூஜ்யமாக குறைய வாய்ப்புள்ளது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. வைரஸின் இனப்பெருக்கம் விகிதம் 0.8 என்றும். அதாவது பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் இந்த நோயை 0.8 பேருக்கு பரப்புகிறார்கள் என்றும் ஆய்வு கூறுகிறது.