புதுதில்லி:
சைவ உணவு சாப்பிடுவோரை கொரோனா தாக்காது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவின. சங்-பரிவாரத்தைச் சேர்ந்த சிலர்,இந்த செய்தியை வேகமாக பரப்பி வந்தனர்.“உலகில் இதுவரை சைவ உணவுப் பழக்கம் கொண்டஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. ஏனெனில், கொரோனா வைரஸ் மனித உடலில் உள்ள அசைவ கொழுப்புக்களை கொண்டே இயங்குகிறது என்று உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது” என்பதுதான் அந்த செய்தியாகும்.இந்நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை. அதில் உள்ளது போன்றதகவலை வழங்கவில்லை என உலக சுகாதார அமைப்பு(World Health Organization) மறுப்பு தெரிவித்துள்ளது.அத்துடன், கொரோனா பாதிப்பு காலக்கட்டத்தில் அசைவ உணவுகளில் உள்ள புரதச் சத்தை உட்கொள்வது நன்மை பயக்கும் என்றே தெரிவித்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.