இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் நேற்று ஒரே நாளில் 52123 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,83,792 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 775 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,968 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், பாதிக்கப்பட்ட சுமார் 15,83,792 பேரில், 10,20,582 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,28,242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.