இந்தியாவில் ஒரே நாளில் 49,931 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 708 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் உகானில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ,மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திங்களன்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 49931 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மேலும் 708 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,35,453 ஆக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32,771 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் 24 மணிநேரத்தில் 917568பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 4,85,114 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.