நாடு முழுவதும் ஒரே நாளில் 48916 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 48,916 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 757 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,87,945லிருந்து 13,36,861ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,17,209லிருந்து 8,49,432ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30,601லிருந்து 31,358ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 4.56 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 8.49 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதைத்தொடரந்து இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.