புதுதில்லி:
தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண் அடிப்படை ஆண்டை 2001இலிருந்து 2016-க்குமாற்றியிருக்கிறது.
இதற்கான அறிவிப்பை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வியாழக்கிழமையன்று வெளியிட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளிப்பதில் மாற்றம் எதுவும் இப்போதைக்கு இருக்காது என்றும்இதனை வெளியிட்ட தொழிலாளர் பீரோ டைரக்டர் ஜெனரல் டி.பி.எஸ். நெகி கூறியுள்ளார்.இதனை வெளியிட்ட விழாவில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ் குமார் கேங்வார் கூறுகையில், இதேபோன்று விவசாயத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் குறியீட்டெண்ணும் மாற்றப்படும் என்றும் தெரிவித்தார். இது தற்போது 1986-87ஆம் ஆண்டைஅடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அக்டோபருக்கான குறியீட்டெண் நவம்பர் 27 அன்று வெளியிடப்படுகிறது. (ந.நி.)