நாட்டில் நுகர்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து நாட்டில் பொருளாதார வளர்ச்சி மிகக்கடுமையாக குறைந்து வருகிறது என தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. குறிப்பாக பண மதிப்பிழப்பு ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகள் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைய காரணம் என்ற பொருளாதார அறிஞர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். இந்நிலையில் ரிசர்வ் வங்கி 13 பெரிய நகரங்களில் உள்ள 5334 வீடுகளில் நுகர்வோர் நம்பிக்கை குறித்து கணக்கெடுத்துள்ளனர்.
இந்த கணக்கெடுப்பின் கடந்த செப்டம்பரில் 89.4 ஆக நம்பிக்கை குறீயீட்டு மதிப்பு, நவம்பரில் 85.7 ஆக குறைந்துள்ளது. இந்த வீழ்ச்சியானது ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்தில் ஆழ்ந்த மந்த நிலை மற்றும் வேலைவாய்ப்பு பற்றி கவலையை அளிக்கிறது. இது வங்கித் துறையில் ஏற்பட்ட நெருக்கடி கடனை கடுமையாக்கியுள்ளது. இது நாட்டின் நுகர்வில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது. அதிலும் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த ஆண்டான 2014லிருந்தே, இந்தியா மீதான நுகர்வோர் நம்பிக்கை குறைந்து வருவதாக இந்த மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன.