tamilnadu

ஜமாஅத்தே இஸ்லாமியுடனான காங்கிரஸின் கூட்டணி கேரள அரசியலில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.... கொடியேரி பாலகிருஷ்ணன் எச்சரிக்கை

திருவனந்தபுரம்:
இந்து ராஷ்டிராவை இலக்காகக் கொண்ட ஆர்எஸ்எஸ்-க்கு இணையான அமைப்பாக ஒரு இஸ்லாமிய அரசை நிறுவும் நோக்கத்துடன் ஜமாத் அத்தே இஸ்லாமி செயல்பட்டு வருகிறது. ஜமாஅத்தே இஸ்லாமியுடன் ஒரு முன்னணியைஉருவாக்க முடிவு செய்துள்ள காங்கிரஸ்,பாப்புலர் பிரண்ட், எஸ்டிபிஐ உடன் கூட்டணிஅமைத்து வருகிறது. அவர்களுடன் இணைந்து செயல்பட காங்கிரஸ் எடுத்த முடிவு கேரள அரசியலில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். எதிர்கால அரசியலைபாஜகவுக்கு சாதகமாக்கும் அணுகுமுறையை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது. இந்த தற்கொலை நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலசெயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர்மேலும் கூறியதாவது: முஸ்லிம் தீவிரவாதகூட்டணியால் மட்டும் வெற்றி பெற முடியாது என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. எனவே, ஆர்எஸ்எஸ் உடன் பிராந்திய கூட்டணியை உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் வாக்குகளால் ஒரு சட்டமன்ற தொகுதியை பாஜக வென்றது. நேமம் தொகுதியில்நடந்த முன்மாதிரியை அடுத்த சட்டமன்ற தேர்தலில் சோதிக்க உள்ளனர். திருவஞ்சூர்ராதாகிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்குச் சென்று ரகசிய உறவின் ஒருபகுதியாக விவாதம் நடத்தினார். அடுத்த சட்டப் பேரவையில் ஐந்து முதல்பத்து இடங்களை பாஜக இலக்கு வைத்துள்ளது. யாருக்கும் பெரும்பான்மைஇல்லாவிட்டால் யுடிஎப் அமைச்சரவையை அவர்களால் கட்டுப்படுத்த முடியும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது. அதற்கான வாய்ப்பை காங்கிரஸ் வழங்குகிறது.மத தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரத்தை ஒருகட்டம்வரை நடத்திய முஸ்லீம்லீகை இப்போது ஜமா அத்துஇஸ்லாமியின் சித்தாந்தம் வழிநடத்துகிறது. காங்கிரஸின் மதச்சார்பற்ற பார்வை முற்றிலும் லீகிற்கு அடிபணிந்துள்ளது. இது குறித்து காங்கிரசில் உள்ளவர்கள் விவாதிக்க வேண்டும். கேரளாவில் காங்கிரசும் பாஜகவும் ஒரு தூய்மையற்ற கூட்டணியின் விளைவாக ஒருவருக்கொருவர் விமர்சிப்பதுகூட இல்லை. பாஜகவை திருப்திப்படுத்த உயர்மட்ட தலைமையில் கட்டளையைக் கூட நிராகரிக்க எதிர்க்கட்சித் தலைவர்ரமேஷ் சென்னிதாலா தயாராக உள்ளார். இது ஆபத்தானது. மதச்சார்பின்மையில் அடித்தளத்தை தகர்க்க வாய்ப்பைக் கொடுத்தால், குஜராத், உத்தரபிரதேசம் போல கேரளா மாறும். இந்த நடவடிக்கையை எதிர்க்க எல்டிஎப்-இன் அரசியல் அடித்தளத்தை விரிவுபடுத்த வேண்டும். அதற்கு யுடிஎப்-க்குள் உள்ளவர்கள் உட்படஎந்தவொரு மதச்சார்பற்ற கட்சியுடனும் எல்டிஎப் ஒத்துழைக்கும் என்று கொடியேரிகூறினார்.