tamilnadu

img

கேரளத்தில் வலுவிழந்தது காங்.கூட்டணி.... யுடிஎப்பில் இருப்பவை காங்கிரஸ், லீக் மட்டுமே!

திருவனந்தபுரம்:
எல்டிஎப் உடன் இணைந்து பணியாற்ற கேரள காங்கிரஸ் (எம்) எடுத்த முடிவை வரவேற்பதாகவும், யுடிஎப் வீழ்ச்சியை துரிதப்படுத்தும் இந்த முடிவு கேரள அரசியலில் சாதகமான விளைவை ஏற்படுத்தும் என சிபிஎம் கேரள மாநில செயற்குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஜோஸ் கே. மாணி தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவித்திருக்கும் சூழ்நிகழ்வில் எல்டிஎப் விவாதித்து முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுடிஎப் உருவாவதற்கு வழிவகுத்த கட்சி 38 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னணியில் இருந்து வெளியேறியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு யுடிஎப்-இல்இருந்து விலகிய எல்ஜேடி, இடது ஜனநாயகமுன்னணியில் ஏற்கனவே இணைந்துள்ளது. தற்போது ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (யுடிஎப்) வலு காங்கிரஸ் மற்றும் லீக் மட்டுமாக மாறியுள்ளது.தனது நிபந்தனையற்ற அரசியல் நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக இடது முன்னணியுடன் ஒத்துழைக்கிறேன் என்று ஜோஸ்கே. மாணி அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது. மதச்சார்பின்மை, விவசாய பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சி தொடர்பான எல்டிஎப்மற்றும் அரசாங்கத்தின் கொள்கைகளை அவர் ஆதரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது நாட்டின் பொதுவான உணர்வைபிரதிபலிக்கிறது. எல்டிஎப் எடுத்த சரியான அணுகுமுறையை அங்கீகரிப்பதாக இது உள்ளது என்றும் சிபிஎம் மாநில செயற்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.