நாகர்கோவில்:
பெங்களூரில் இருந்து கடந்த பத்து நாட்களுக்கு முன் ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்துசிறுமி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடகா காவல் துறையினர் தென் மாநிலகாவல் நிலையங்களுக்கு குழந்தை கடத்தல்சம்பவத்தை தெரியப்படுத்தினர்.
இந்நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் காட்டாகடை பகுதியை சேர்ந்த ஜோசப்ஜான் என்பவர் தனது மனைவி, இரண்டு குழந்தைகளோடு களியக்காவிளை பேருந்துநிலையத்தில் இருந்து தமிழக கேரள எல்லைசோதனை சாவடியை தாண்டி செல்ல முயன்றார்.
அப்போது அவருடன் வந்த பெண் குழந்தை தொடர்ந்து அழுவதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர்அவர்களை பிடித்து விசாரித்த போது அவருடன் இருந்த இரண்டரை வயது பெண் குழந்தை லோகிதாவை பெங்களூரில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.இதை தொடர்ந்து அவர்களை களியக்காவிளை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். குழந்தைகளை நாகர் கோவில் காப்பகத்தில் சேர்த்தனர். இந்நிலையில் குழந்தை லோகிதாவின் தாய் கார்த்திகாமற்றும் உறவினர்கள் பெங்களூரில் இருந்துகுமரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்தனர்.பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அந்த குழந்தையை பெங்களூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். தமிழ்நாடு காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்து குழந்தையை அவர்கள் பெற்றுக் கொண்டனர். இதுதொடர்பான வழக்கை பெங்களூர் மெஜஸ்டிக் காவல் துறையினர் கையாண்டு வருவதால் ஜோசப்ஜானையும் பெங்களூருக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.