கேரள மாநிலம் வட்டியூர்காவு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எல்டிஎப் சார்பில் போட்டியிடும் திருவனந்தபுரம் மேயர் வி.கே.பிரசாந்தை ஆதரித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசினார். வட்டியூர்காவு, பேரூர்கடா, நந்தன்கோடு ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.