திருவனந்தபுரம்:
கேரள அரசு சார்பில் முதியோரின் பாதுகாப்பை உறுதி செய்ய அக்டோபர் 1 முதல் 7 வரைஒருவாரகால பிரச்சாரம் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரங்களில் குடும்பஸ்ரீ, என்எஸ்எஸ், மாணவர் போலீஸ் படைகள் பங்கேற்பது உறுதி செய்யப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் திங்களன்று நடந்தகோவிட் ஆய்வுக்கூட்டத்திற்கு பிறகு செய்தி யாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
கடந்த ஒரு வாரத்தில் மாநிலத்தில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. அறிவியல் பூர்வமான அளவுகோல்களின் அடிப்படையில் கேரளம் நோய் கட்டுப்பாட்டில் முன்னணியில் உள்ளது. அந்த நிலைமை இப்போது மாறத் தொடங்கியிருக்கிறது. ஒவ்வொரு 20 நாட்களுக்கும் சராசரியாக நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. கேரளத்தில் ஒரு மில்லியனுக்கு (10 லட்சம்) 5143 நோயாளிகள் உள்ளனர். இதில் இந்திய சராசரி 5852. ஆனாலும், நோய் ஏற்பட்டவர்களில் இறப்பு விகிதம் தேசிய சராசரியை விட மிகச்சிறந்த நிலையில் கேரளம் உள்ளது. தேசிய சராசரி 1.6 சதவிகிதமாக இருக்கும்போது, கேரளாவில் இது 0.4 சதவீதம் மட்டுமே. இங்குள்ள சிறந்த கவனிப்பு மற்றும் மருத்துவ வசதிகளால் நோயாளிகள் குணமடைகிறார்கள்.
மரணங்களை தவிர்க்க...
நோய் பரவல் கட்டுப்படுத்தப்பட்டால் மட்டுமே மரணத்தின் எண்ணிக்கையை குறைக்க முடியும். நம்மால் மரணத்தைத் தவிர்க்க முடியும். அதிகரித்து வரும் நோயை சமாளிக்க தேவையான ஏற்பாடுகளையும் அரசாங்கம் வலுப்படுத்திவருகிறது. நோய் பரவுவதைத் தடுப்பது முக்கியம். நோய் பெருக்கத்தின் அபாயத்தைக் குறைப்பதற்கான தலையீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. கேரளத்தின் காலநிலை மாற்றமும் அதை செயல்படுத்துவதில் தடையாக உள்ளது. தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்கு வகிக்கும் காவல்துறை, சட்டம் ஒழுங்கை பராமரிக்கச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இது அடிப்படையான ஒரு தடையாகும். இனி காத்திருக்க நேரமில்லை. கடும் நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டிய நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று முதல்வர் கூறினார்.
தனிமனித இடைவெளியை பராமரிக்கா தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இடைவெளி ஏற்படுத்தாத கடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். திருமணத்திற்கு 50 பேர், இறுதி நிகழ்ச்சிகளுக்கு 20 என்று நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற விசயங்களை மீறுபவர்களுக்கு எதிராக தலையீடு செய்ய வேண்டும். அதற்கு தற்போதைய அமைப்பு போதாது.ஒவ்வொரு பகுதியிலும் புதிய குழுக்கள் இதற்காக அமைக்க வேண்டும். பஞ்சாயத்துகள் மற்றும் மாநகராட்சிகளில் இதுபோன்ற விசயங்களின் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். இப்போதைக்கு அவர்களுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டியிருக்கும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பிந்தைய சிகிச்சை மையம்
தற்போது மாநிலம் முழுவதும் 225 கோவிட் முதல் வரிசை சிகிச்சை மையங்கள் (சிஎப்எல்டிசி) இயங்கி வருகின்றன. குறைந்த அளவிலான நோய் அறிகுறிகளுடன் அல்லது அறிகுறிகள் இல்லாத நோயாளிகளைப் பராமரிப்பதற்காக இவை அமைக்கப்பட்டுள்ளன. சிஎப்எல்டிசிகளில் 32,979 படுக்கைகள் உள்ளன. இதில், 19478 படுக்கைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிட்டிலிருந்து குணமடைந்தவர்களுக்கு பல்வேறு விதமான நோய்கள்ற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக, ‘கோவிட்டுக்கு பிந்தையசிகிச்சை மையம்’ தொடங்கவும்பரிசீலிக்கப்படும். அறிகுறிகள் மோசமடையும் நோயாளி களுக்கு சிகிச்சையளிக்க 38 கோவிட் இரண்டாம்நிலை சிகிச்சை மையங்களையும் (சிஎஸ்எல்டிசி) அரசு அமைத்துள்ளது. இத்தகைய, 18 மையங்களில் 689 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள னர். நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் பாது காப்பிற்கு தேவையான ஐ.சி.யூ வசதிகள், வெண்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றை அதிக அளவில் அரசு வழங்கியுள்ளது. நோய் பரவுவது ஒரு முக்கியமான கட்டத்திற்கு முன்னேறும் பட்சத்தில் அனைத்து மட்டங்களிலும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். கோவிட் இரண்டாம் நிலை பராமரிப்பு மையங்களில் பி பிரிவான கடுமையான நோயாளிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதன் ஒரு பகுதியாக, தற்போதுள்ள முதல் வரிசை சிகிச்சை மையங்களில் கூடுதல் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் நிலை பராமரிப்பு மையங்களைஉருவாக்குவதும், அறிகுறிகள் உள்ளவர்களுக்கு அதிக கவனத்தையும் கவனிப்பையும் உறுதி செய்வதே இதன் நோக்கம்.
இங்கு சிகிச்சை பெறுபவர்கள் வீட்டுக்குசெல்லும்போது நோய் அறிகுறி இல்லாத குழந்தைகள், முதியோர் உட்பட அனைவருக்கும், காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற லேசான அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு வீட்டு சிகிச்சை பரிந்துரைக்கப்படும். ஒரு வீட்டில் ஒருவருக்கு நோய் தொற்று இருந்தால், குடும்ப உறுப்பினர்கள் கடுமையான வீட்டு கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுவார்கள். நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அறிகுறி இல்லாதவர்களுக்கும், காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை புண் போன்ற சிறிய அறிகுறி உள்ளவர்களுக்கும், மருத்துவமனையில் இருந்து அறிகுறிகள் விலகிதிரும்பி வருபவர்களுக்கும் அளிக்கப்படும் வீட்டு சிகிச்சை உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்த தர அடிப்படையில் அமைந்தவையாகும்.
அனைத்துக்கட்சி கூட்டம்
இது நமக்கு அறிமுகமில்லாத சூழ்நிலை. இதைக் கடக்க நாம் அனைத்து நடவடிக்கைகளை யும் எடுக்க வேண்டியிருக்கும். எல்லோரும் அதை ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும். அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்தே அந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஒரு தீவிர அவசரநிலை முன்னால் உள்ளது என்றார்.