tamilnadu

img

உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்...

புதுதில்லி:
முக்கியமற்ற சொத்துக்களை பணமாக்குவது குறித்த ஆலோசனை சேவைகளை பெற உலக வங்கியுடன், மத்திய அரசின் முதலீடுமற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத்துறை(டிபாம்)  நவம்பர் 17 செவ்வாயன்று  ஒப்பந்தம் செய்துள்ளது.

பங்கு விற்பனை அல்லது மூடல் திட்டத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனங்களின் முக்கியமற்ற சொத்துக்கள் மற்றும்ரூ.100 கோடிக்கு மேற்பட்ட எதிரிகளின் சொத்துஆகியவற்றை   முதலீடு மற்றும் பொதுச்சொத்துமேலாண்மை துறை பணமாக்குகிறது.முக்கியமற்ற சொத்துக்களை பணமாக்குவதற்கு  முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறை திட்டம் வைத்துள்ளது.  தற்போது இத்துறை, முக்கியமற்ற சொத்துக்களை பணமாக்குவது தொடர்பான ஆலோசனைகளை பெற உலக வங்கியுடன் ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளது. இத்திட்டத்துக்கு மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். 

இந்த ஆலோசனைத் திட்டம், இந்தியாவில் பொதுச் சொத்து பணமாக்குதலை பகுப்பாய்வு செய்கிறது. சர்வதேச மற்றும் சிறந்தநடைமுறைகளுக்கு எதிராக அதன் நிறுவனமற்றும் வணிக மாதிரிகளை மதிப்பீடுசெய்வதோடு, செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதற்கும், அவற்றை அமல்படுத்துவதற்கான திறனை வளர்ப்பதற்கும் துணை புரிகிறது.இந்த திட்டம் முக்கியமற்ற  சொத்துக்களை, பணமாக்கும்  செயல்முறையை எளிதாக்கும் மற்றும் துரிதப்படுத்தும் என்றும் பயன்படுத்தப்படாத / ஓரளவு பயன்படுத்தப்பட்ட  சொத்துக்கள் மூலம்   முதலீடுகள் மற்றும்வளர்ச்சிக்கான நிதி ஆதாரங்களை பெருமளவு  அதிகரிக்கஉதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.