tamilnadu

img

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு... கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

புதுதில்லி:
2021 சிபிஎஸ்இ பொதுத் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை அக்டோபர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான கட்டணத்தைச் செலுத்த அக்டோபர் 15 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.கொரோனா சூழலில் கட்டணத்தைச் செலுத்தக் குறைவான காலமே இருப்பதாகப் பெற்றோர்கள், மாணவர்கள் கருத்துத் தெரிவித்தனர். தில்லி அரசு, முழுமையாகத் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்துவதில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

இந்நிலையில் சிபிஎஸ்இஇணையதளம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘’10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தக் கடைசித் தேதி அக்டோபர் 15 ஆம் தேதி வரை இருந்தது. தற்போது அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்படுகிறது. தாமதக் கட்டணத்துடன் கூடிய தேர்வுக்கட்டணத்தைச் செலுத்துவதற்கான கடைசித் தேதி நவம்பர் 1 ஆம் தேதி வரைஇருந்தது. தற்போது நவம்பர் 7 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.