புதுதில்லி:
தில்லி, மும்பை, மதுரை உள்பட நாடு முழுவதிலும் 110 இடங்களில் சிபிஐஅதிகாரிகள் செவ்வாயன்று சோதனை யில் ஈடுபட்டனர்.பல்வேறு வழக்குகள் தொடர்பாக சிபிஐ செவ்வாயன்று மெகா சோதனை யை தொடங்கியது. நாடு முழுவதும் 19 மாநிலங்களில் 110 இடங்களில், சிபிஐ அதிகாரிகள் தனித்தனி குழுவாகச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.தில்லி, மும்பை, சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், புனே, ஜெய்ப்பூர், கோவா, ரா ய்ப்பூர், ஐதராபாத், மதுரை, கொல்கத்தா, ரூர்கேலா, ராஞ்சி, பொகாரோ, லக்னோ, கான்பூர் உள்ளிட்ட நகரங்களிலும், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், ஒடிசா, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், அரியானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனை நடைபெறுகிறது. ஊழல்,ஆயுதக் கடத்தல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்ய ப்பட்ட புதிய வழக்குகள் தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.