tamilnadu

img

சாதி மறுப்புத் திருமணத் தம்பதியருக்கு ஊக்கத்தொகை...மத்திய அரசு அலட்சியம்

புதுதில்லி:
வருடத்திற்கு சாதி மறுப்புத் திருமண தம்பதியருக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும் என்ற500 இலக்கு வெறும் அடையாளம் மட்டுமே; முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயமில்லை என்று மத்திய அரசு, அலட்
சியமான பதிலை தெரிவித்துள்ளது. சாதி மறுப்பு திருமணங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும்ஊக்கத் தொகைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுத்துப்பூர்வமாக பல கேள்விகளை எழுப்பினார்.சமூக ஒருமைப்பாட்டிற்கான டாக்டர் அம்பேத்கர் திட்டத்தின் மூலம் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொள்ளும் ஒவ்வொருமணமக்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகை எவ்வளவு; 2015-16 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரையிலான நான்கு ஆண்டுகளில் சாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட தம்பதிகளில் எத்தனை பேர் ஊக்கத் தொகை வேண்டி விண்ணப்பம் அளித்து இருந்தன; ஒரு நிதியாண்டில் 500 சாதி மறுப்பு தம்பதிகளுக்கு  வழங்கப்படும் அளவிற்கான ஊக்கத்தொகை கிடைத்ததா என்பது உள்ளிட்ட கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.

இக்கேள்விகளுக்கு சமூக நலத் துறையின் இணை அமைச்சரான ரத்தன் லால் கடாரியாஅளித்துள்ள பதில் வருமாறு:சமூக ஒருமைப்பாட்டிற்கான டாக்டர் அம்பேத்கர் திட்டத்தின் மூலம் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் ஒவ்வொரு மணமக்களுக்கும் வழங்கப்படும் ஊக்கத் தொகை ரூ. 2.5 லட்சம்ஆகும். 2015-16 ம் ஆண்டு 544 சாதிமறுப்பு தம்பதியினர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 54 பேருக்கு மட்டும் ஊக்கத்தொகை அளிக்கப்பட்டது. இதே போல் 2016-17, 2017-18, 2018-19 ஆகிய
ஆண்டுகளில் முறையே 711விண்ணப்பங்களில் 67 தம்பதியினருக்கும், 582 விண்ணப்பங்களில் 136 தம்பதியினருக்கும், 493விண்ணப்பங்களில் 120 தம்பதியினருக்கு மட்டுமே வழங்கப்பட்டது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.மேலும், “ஒரு வருடத்திற்கு 500 எனும் இலக்கு  2013-14, 2014 -15 ஆகிய இரு ஆண்டுகளுக்கு பரிசோதனை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மட்டுமே. 2015 ம் ஆண்டையும் தாண்டியும் இத்திட்டத்தை தொடர வேண்டும் என டாக்டர் அம்பேத்கர் மையம் முடிவெடுத்தது. வருடத்திற்கு 500 எனும்இலக்கு அடையாளப்பூர்வ மானது மட்டுமே. இலக்கை முழுமையாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயமில்லை” என்றும் அமைச்சர் தான் அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளார். ஊக்கத் தொகையினை அதிகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அப்பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;