தில்லி, ஜூலை 8- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் மீது அதிருப்தி யில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ம.பா.பாண்டிய ராஜன், செம்மலை, சரவணன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் அவரது அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருப் பினும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்ததால் நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது. இந்த நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவ காரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. தரப்பில் சபா நாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்க வில்லை. இதையடுத்து திமுக தரப்பில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தொட ரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தி.மு.க சட்டசபை கொறடா சக்கரபாணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி யுள்ளதாக சபாநாயகர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓபி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் உத்தரவு வந்து மூன்று மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் இது வரை சபாநாயகர் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. அதனால் இந்த விவ காரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து மேற்கண்ட வழக்கை அவசர மனுவாக கருதி உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என குறிப் பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி சபாநாயகர் தன பாலன் மற்றும் சட்டப்பேரவை செயலா ளர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக் களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.