tamilnadu

img

மன்னிப்பு கேட்க முடியாது - பிரசாந்த் பூஷண் உறுதி

நீதிபதிகள் தொடர்பான விமர்சன பதிவுகளுக்கு மன்னிப்பு கேட்ட முடியாது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உறுதி பட தெரிவித்துள்ளார். 

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் உள்ளிட்ட நீதிபதிகளின் நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்திருந்தார். மேலும் கொரோனா நோய்த்தொற்று காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் வழக்கை உச்சநீதிமன்றம் முறையாக கையாளவில்லை என்று குற்றம் சாட்டினார்.  இதுகுறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. 

இந்த விசாரணையில் நீதிபதி வண்டி ஓட்டினார் என்று நினைத்து கருத்து தெரிவித்தேன். ஆனால் அது நின்று கொண்டிருந்த வாகனம் என்று பின்னர் தான் தெரியவந்தது. எனவே ட்விட்டின் அந்தப் பகுதிக்கு மட்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத உச்ச நீதிமன்றம் விசாரணையின் முடிவில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என்று கடந்த 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து தண்டனை விபரங்கள் குறித்து அறிவிக்க உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று கூடியது. அப்போது தண்டனை விவரங்கள் குறித்து இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்போது பிரசாந்த் பூஷண் எனது நிலைப்பாட்டில் நான் மிகத் தெளிவாக இருக்கிறேன். நீதிபதிகள் குறித்து சுட்டுரையில் பதிவிட்ட இரண்டு பதிவுகளுக்காவும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். எனது கருத்தில் தற்போதும் உறுதியாக உள்ளேன். நான் எனது அடிப்படை கடமையை செய்ததாகவே கருதுகிறேன். நான் செய்தது தவறென உச்சநீதிமன்றம் கருதும் பட்சத்தில் எனக்கு அளிக்கப்டும் தண்டனையை மகிழ்ச்சியோடு ஏற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.