tamilnadu

img

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணி நியமன தேர்வு ரத்து

ஜூனியர் தொலைத் தொடர்பு அலுவலருக்கான பணி நியமன  அறிவிப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் ரத்து செய்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனம் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி வகை பிரிவினர்களுக்கு எஸ்ஆர்டி-யின் கீழ் 198 ஜூனியர் டெலிகாம் அலுவலருக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அறிவித்தது.கேட் தேர்வின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெறும் என கடந்த ஜனவரி மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது.இதற்காக பல பேர் விண்ணப்பித்து இருந்தனர்.இந்நிலையில் மத்திய அரசின் தவறான நிர்வாக கவனமின்மையினால் பொருளாதார நெருக்கடி,ஊதிய பிரச்சனை போன்ற நெருக்கடிகளை பிஎஸ்என்எல் நிறுவனம் சந்தித்து வந்தது. இதன் காரணமாக   ஜூனியர் டெலிகாம் அலுவலருக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது ரத்துசெய்துள்ளது. 

;