tamilnadu

img

சிஏஏ போராட்டக்காரர்களால் வல்லுறவு ஆபத்தாம்... பாஜக எம்.பி.யின் மலிவான பேச்சு

புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள், மக்களின் வீடுகளுக்குள் நுழைந்து பெண்களையும் குழந்தைகளையும் வல்லுறவுக்கு உள்ளாக்கி படுகொலை செய்யக் கூடியவர்கள் என்று தில்லி பாஜகஎம்.பி. பர்வேஷ் வர்மா பேசியுள்ளார்.
இதுதொடர்பாக பர் வேஷ் வர்மா மேலும் கூறியிருப்பதாவது:தில்லி தேர்தல் என்பது மிகச் சிறிய தேர்தல் அல்ல.இந்த தேசத்தின் ஒருமைப்பாட்டையும் நிலைத்தன்மையையும் வெளிப்படுத்துகிற தேர்தல். தில்லியில் பாஜக ஆட்சி அமைந்தால் ஒருமணிநேரத்தில் ஷாகீன் பாக்பகுதியில் போராடுகிறவர் கள் ஒருவர் கூட அங்கே இருக்க மாட்டார்கள். என்னுடைய மேற்கு தில்லி தொகுதியில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட அனைத்து மசூதிகளையும் அகற்றுவேன். 

தில்லி ஷாகீன் பாக் பகுதியில் லட்சக்கணக்கான மக் கள் திரண்டுள்ளனர். தில்லி மக்கள் இப்போது ஒரு முடிவுஎடுக்க வேண்டிய தருணம்.ஏனெனில் சிஏஏ போராட்டக்காரர்கள் உங்கள் வீடுகளுக் குள் நுழைந்து விடுவார்கள்.. உங்கள் சகோதரிகளை, குழந்தைகளை வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்துவிடுவார்கள். இன்றே முடிவெடுங்கள்.. நாளை உங்களை காப்பாற்ற மோடியும் அமித்ஷாவும் வரமாட் டார்கள். இவ்வாறு பர்வேஷ் வர்மா பேசியுள்ளார்.

;