tamilnadu

img

தில்லிக் கலவரங்களுக்குப் பின்னால் பாஜக... ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

புதுதில்லி:
தில்லியில் நடைபெற்ற கலவரங்களுக்குப் பின்னால் பாஜக-வின் நன்கு திட்டமிடப்பட்ட சதி உள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர், சஞ்சய் சிங், குற்றம்சாட்டியுள்ளார்.

“தில்லிக் கலவரங்கள் பாஜக-வின் சதி வேலையாகும். பாஜக-வும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப் பாட்டின்கீழ் வரும் தில்லிக் காவல்துறையும் நன்கு திட்டமிட்டு இதனை நடத்தியுள்ளன. இக்கலவரங்கள் தொடர்பாக காவல்துறை எவ்விதமான புலன் விசாரணையையும் மேற்கொள்ளவில்லை,” என்று சஞ்சய் சிங் கூறினார்.  மேலும் அவர், குற்ற அறிக்கைகளை முறையாகத் தாக்கல் செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார். “ஒருசில வழக்குகளில் மிகவும் மோசமான விதத்தில் குற்ற அறிக்கைகளைத் தாக்கல் செய்திருக்கும் அதே சமயத்தில், இதர வழக்குகளில் கூடுதல் விவரங்களை சேர்த்து தாக்கல் செய்திருக்கின்றனர். சில வழக்குகளில் உண்மைகளை மூடி மறைத்திருக்கின்றனர்,” என்றும் சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். கலவரங்களில் பாஜக-வினர் நடத்தியகுற்றச்செயல்களை மூடி மறைத்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் சஞ்சய் சிங் கூறினார்.(ந.நி.)

;