tamilnadu

img

பீகார்... தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் மகாகத்பந்தன் கூட்டணி முன்னிலை... பாஜக கூட்டணிக்கு கடும் பின்னடைவு

புதுதில்லி:
பீகார் சட்டமன்றத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தேர்தல் நாளன்று வாக்களித்துவிட்டு வரு பவர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கின்றன.

பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து விட்டு வெளியேவரும் வாக்காளர்களிடம் கருத்துக்கேட்கும் பணியில் ஆறு ஊடகங்கள் குழு ஈடுபட்டிருந்தன. இந்த ஆறு குழுவினருமே ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மகாகத்பந்தன் கூட்டணியே அதிகஇடங்களைக் கைப்பற்றும் என்று கூறியிருக் கின்றன.  நவம்பர் 10 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கருத்துக்கணிப்புகள் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடுமையான முறையில் வீழ்ச்சியடையும் என்று கூறுகின்றன.  சிஎன்என்நியூஸ் 18-டுடே சாணக்யா ஊடகங்கள் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மகாகத்பந்தன் கூட்டணி 44 சதவீத வாக்கு களைப் பெற்று, 180 இடங்களைக் கைப்பற்றும் என்றும், பாஜக கூட்டணி 34 சதவீத வாக்குகளைப் பெற்று 55 இடங்களைக் கைப்பற்றும் என்றும் கூறுகிறது.டிவி9-பாரத்வர்ஷ் ஊடகம், மகாகத்பந்தன் கூட்டணி 115-125 இடங்களையும் பாஜக கூட்டணி 110-120 இடங்களையும் கைப்பற்றும் என்று கூறுகிறது.இந்தியா டுடே-ஆக்ஸிஸ் மை இந்தியா ஊடகம், மகாகத்பந்தன் கூட்டணி 135-161 (44 சதவீதம்) இடங்களையும், பாஜக கூட்டணி 69-91 (39 சதவீதம்) இடங்களையும் கைப்பற்றும் என்று கூறுகிறது.

டைம்ஸ்நவ்-சி வோட்டர் ஊடகம், மகாகத்பந்தன் கூட்டணி 120 இடங்களையும், பாஜக கூட்டணி 116 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கிறது.ரிபப்ளிக் டிவி-ஜன்கிபாத் ஊடகம், மகாகத்பந்தன் கூட்டணி 116-138 இடங்களையும், பாஜக கூட்டணி 91-119 இடங்களையும் கைப்பற்றும் என்று கணித்துள்ளது.எபிபி நியூஸ்-சி வோட்டர் ஊடகம், மகாகத்பந்தன் கூட்டணி 108-131 இடங்களையும், பாஜக கூட்டணி 104-128 இடங்களையும் கைப்பற்றும் என்கிறது.நியூஸ் எக்ஸ்-டிவி ரிசர்ச் ஊடகம், மகாகத்பந்தன் கூட்டணி 108-123 இடங்களையும், பாஜக கூட்டணி 110-117 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. (ந.நி.)