tamilnadu

img

ஐ.நா .பாதுகாப்பு கவுன்சிலில்  சீர்திருத்தம் அவசியம்... பிரதமர் மோடி வலியுறுத்தல்....  

புதுதில்லி:
பிரிக்ஸ் நாடுகளின் 12-வது மாநாடு நவம்பர் 17 செவ்வாயன்று நடைபெற்று வருகிறது. ரஷியா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. காணொலிக்காட்சி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில்இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன ஜனாதிபதிஜின்பிங்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினும் பங்கேற்றுள்ளனர். 

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:  பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளை பொறுப்பாக்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்தப் பிரச்சனையை முறையான வழியில்  சீர் செய்ய வேண்டும். இந்தியா பன்முகத்தன்மைக்கு உறுதியான ஆதரவளிக்கும் நாடாகும். ஐக்கிய நாடுகள் அவையின் 75-வது ஆண்டு தினம் தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியமானது. பன்முகத்தன்மைக்கு ஆதரவளிக்கும் முதன்மையான நாடு இந்தியா ஆகும். இந்திய பாரம்பரியபடி   ஒட்டு மொத்த உலகமும் ஒரு குடும்பமாக கருதப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.