tamilnadu

தமிழகத்தில் அதிமுக, பாஜகவிடம் சரண்டர்

தமிழகத்தில் அதிமுக, பாஜகவிடம் சரண்டர் ஆகிவிட்டது. அவர்களது ஊழல்களை வைத்து பாஜக மிரட்டி அதிமுகவை பணிய வைத்துள்ளது. இந்த கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில் பாஜக தில்லி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தோற் கடிக்கப்பட்டுள்ளது. கோவா, மணிப்பூர் மாநிலங்களில் பெரும்பான்மை இல்லாத பாஜக ஆட்சி உள்ளது. தென்னிந்தியாவில் பாஜக வெற்றி பெறாது. பாஜக ஆட்சி யில் ராணுவத்தின் பெயர் தவறாக பயன் படுத்தப்படுகிறது. மதவாத கொள்கை கொண்ட பாஜக மற்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கூட்டணி கட்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்பட வேண்டும். தேர்தலுக்குப் பின் பாஜகவை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் தேசிய அளவில் கூட்டணி அமைக்கும். தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை விட இது பலமாக இருக்கும். பாஜக எதிர்ப்பு அணிகள் ஒன்று சேரும் என்றார்.


கோயம்புத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி கூறியதிலிருந்து...

;