புதுதில்லி:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாப் மாநில அரசு நிறைவேற்றியுள்ள விவசாய சட்டங்கள் ஓர் ஆக்கபூர்வமான நடவடிக்கை என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. அதே சமயத்தில்நெல் மற்றும் கோதுமைக்கு மட்டும் குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக சட்டமியற்றியிருப்பது ஏன் என்றும் மற்ற அத்தியாவசியப் பொருள்களின் நிலை குறித்து என்ன நிலை என்று கேட்டுள்ளது.
மேலும் வேளாண்மையைக் கார்ப்பரேட்மயமாக்குவதற்கு எதிராக விவசாயிகள்-தொழிலாளிகள் சமூகக் கூட்டுறவு சங்கங்களை அமைத்திடசட்டமியற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக சங்கத்தின் அகில இந்திய தலைவர் டாக்டர் அசோக் தாவ்லே, பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக, நாடு தழுவிய அளவிலும் மற்றும் பஞ்சாப் மாநிலம் முழுவதும் நடைபெற்ற விவசாயிகளின் ஒன்றுபட்ட கிளர்ச்சிப் போராட்டங்கள், காங்கிரஸ் தலைமையிலான பஞ்சாப் மாநில அரசாங்கத்தையும் விவசாயிகளைப் பாதுகாக்கக்கூடிய விதத்தில் வேளாண்சட்டங்களை நிறைவேற்ற நிர்ப்பந்தித்துள்ளது. இது விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். பஞ்சாப் மாநிலஅரசாங்கம் மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவுவேளாண் சட்டங்களுக்கு எதிராக நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள் இந்தத் திசை வழியில் ஒரு சரியான நடவடிக்கையாகும். மத்தியஅரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்கள்நாட்டின் அரசமைப்புச்சட்டத்தின் கூட்டாட்சித்தத்துவத்தை மீறுகின்றன. அத்தியாவசியப்பொருள்களை இருப்பு வைத்துக்கொள்வதற்கும், வர்த்தகம் செய்வதற்கும் நாடு முழுவதும்கொள்ளை லாபம் ஈட்டக்கூடிய விதத்தில் எவ்விதஅனுமதியுமின்றி எடுத்துச்செல்வதற்கும் தனியாருக்கு அளவுக்கு மீறிய அதிகாரங்களை அளித்திருக்கிறது என்று மிகவும் சரியாகவே இவற்றில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. மத்தியஅரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களைச் சட்டரீதியாகத் தூக்கி எறியக்கூடிய விதத்திலும், அதேபோன்று மாநிலங்களின் கூட்டாட்சித்தத்துவத்தை உறுதிப்படுத்தும் விதத்திலும், இவற்றுக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசாங்கம் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
அனைத்து விளைபொருளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை
எனினும், நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களில் மேலும் செய்யவேண்டிய அம்சங்கள் இருப்பதாகவே அகில இந்திய விவசாயிகள் சங்கம் கருதுகிறது. முக்கியமாக, விவசாயவிளைபொருள்கள் அனைத்திற்கும் அவற்றின் உற்பத்திச் செலவினத்துடன் ஒன்றரை மடங்கு விலை நிர்ணயம் செய்து குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயித்து, அவற்றைக் கொள்முதல்செய்திட வேண்டும். ஆனால் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்களில் அது நெல்லுக்கும்கோதுமைக்கும் மட்டும் எனக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. மற்ற பயிரினங்களைப் பொறுத்தவரை மவுனமாக இருக்கிறது. இது கேரள அரசாங்கம் எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு முற்றிலும்மாறானதாகும். கேரள அரசாங்கம், 16 காய்கறிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அறிவித்திருக்கிறது. மேலும் நெல் கொள்முதலுக்கு குவிண்டாலுக்கு 2,750 ரூபாய் விலை நிர்ணயம்செய்திருக்கிறது. இது மத்திய அரசு நிர்ணயித்துள்ள குவிண்டாலுக்கு 900 ரூபாய் என்பதை விட அதிகமாகும். மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கட்டுப்படியாகக்கூடிய விலை நிர்ணயம் செய்வதற்கும் உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப் சட்டங்கள் பஞ்சாப் விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒரு பகுதியை மட்டுமேநிறைவேற்றி இருக்கிறது. அந்தப் பயிர்களைப் பொறுத்தவரை குறைந்தபட்ச ஆதார விலையைவிட குறைவான விலைக்கு வாங்கும் வர்த்தகர்களுக்கு எதிராகத்தான் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறது. இந்தச்சட்டங்களில் கார்ப்பரேட் ஒப்பந்த விவசாயம்போன்று முக்கிய பிரச்சனைகள் குறித்தும் அவர்கள் பண்ணை நிலங்களை எடுத்துக்கொள்வதைப் பொறுத்தும் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
விவசாயி-தொழிலாளி சமூகக் கூட்டுறவு சங்கங்கள்
பிரதான விவசாய விளைபொருள்களுக்கு சிறந்த விலைகள் நிர்ணயிக்கப்படுவது அவசியத்தேவைதான். ஆனால் அதே சமயத்தில், விற்பனையிலிருந்து கிடைக்கும் உபரியின் பங்கும் விவசாயிகளுக்குச் சென்றடைந்திட வேண்டும். அப்போதுதான், விவசாயம் விவசாயிகளுக்கு ஒரு கவர்ச்சிகரமான அம்சமாகஇருந்திடும். கார்ப்பரேட்டுகளின் சுரண்டலையும்கணிசமான அளவிற்குக் கட்டுப்படுத்திட முடியும்.இவற்றுக்காகவும், கார்ப்பரேட்மய வேளாண்மைக்கு எதிராகவும், விவசாய விளைபொருள்களைக் கொள்முதல் செய்வதற்கும், பதப்படுத்துவதற்கும், கூடுதல் மதிப்பைச் சேர்ப்பதற்கும், சந்தைப்படுத்துவதற்கும், விவசாயி-தொழிலாளி சமூகக் கூட்டுறவு சங்கங்களை அமைத்திட, சட்டம் இயற்ற வேண்டும் . இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (ந.நி.)