tamilnadu

img

இந்தித் திணிப்புக்கு எதிராக கர்நாடகத்தில் போராட்டம்

புதுதில்லி:
‘தேசியக் கல்விக் கொள்கை-2019’ என்ற பெயரில், இந்தியைக் கட்டாயமாக்கும் முயற்சியில், மோடி அரசு இறங்கியுள்ள நிலையில், இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநிலத்தின் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியும் கற்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங் கள் எழுந்துள்ளன.

அதனொரு பகுதியாக, கர்நாடக மாநிலத்திலும், பல்வேறு அமைப்பினர், மோடி அரசின் தேசிய வரைவுக் கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். “இந்தி மொழிக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது; இதன்மூலம் இந்தியை ஆட்சி மொழியாக்க முயற்சி நடைபெறுகிறது; பலர் நினைப்பது போல, இந்தி தேசிய மொழி அல்ல; இருந்தும் மத்திய அரசு இந்தியைத் திணிக் கிறது” என்று ‘கன்னட கிரககார கூடம்’ எனும் அமைப்பின் நிர்வாகி கணேஷ் சேத்தன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தங்களைப் பொறுத்தவரை, அனைத்து மொழிகளையும் சமமாக நடத்த வேண்டும் என்பதே குறிக்கோள் என்றும், இதற்காக ஏற்கெனவே 30 மொழிகளின் பிரதிநிதிகளை அழை த்து மாநாடு ஒன்றை கடந்தாண்டு நடத்தி இருப்பதாகவும் சேத்தன் தெரிவித்துள்ளார்.