tamilnadu

img

காங்கிரஸ் நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்

புதுதில்லி:
காங்கிரஸ் கட்சியின் நிர்வாக அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் பதவியிலிருந்து குலாம் நபி ஆசாத், மோதிலால் வோரா, அம்பிகா சோனி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை நீக்கி சோனியா காந்தி நடவடிக்கை எடுத்துள்ளார்.

காரியக் கமிட்டியில் மாற்றங்களைச் செய்த சோனியா காந்தி, ப.சிதம்பரம், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தாரீக்அன்வர், ஜிதேந்திர சிங் ஆகியோரை வழக்கமான உறுப்பினர்களாக மாற்றியுள்ளார்.சோனியா காந்திக்கு ஆலோசனைகள் அளி்க்கவும், நிர்வாகப் பணிகளை கவனிக்கவும் 6 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளார். இந்த குழுவில் ஏ.கே. அந்தோனி, அகமது படேல், அம்பிகா சோனி, கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர காங்கிரஸ் தலைவரைத் தேர்வு செய்ய மத்திய தேர்தல்ஆணையத்தை சோனியா அமைத்துள்ளார். இந்த குழுவுக்கு மதுசூதன் மிஸ்திரி தலைவராகவும், ராஜேஷ் மிஸ்ரா, கிருஷ்ணா பைரே கவுடா, ஜோதிமணி, அரவிந்தர்சிங் லவ்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுதான் புதிய தலைவரைத் தேர்வுசெய்யும்.காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டியிலிருந்து நீக்கப்பட்ட லூசின்கோ பலேரியாவுக்கு பதிலாக, மோதிலால் வோரா, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, தம்ராத்வாஜ் சாஹு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.ரன்தீப் சிங் சுர்ஜேவாலா தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளராகவும், தகவல்தொடர்பு துறையின் பொறுப்பாளராகவும் உள்ளார். அவருக்கு கர்நாடக காங்கிரஸ் விவகாரங்களின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

காரியக் கமிட்டிக்கு நிரந்தர அழைப்பாளர்களாக திக்விஜய் சிங், ஜெய்ராம் ரமேஷ், சல்மான் குர்ஷித், அவினாஷ் பாண்டே, சவுத்ரி ஆகியோரும், பிரமோத் திவாரி,பவன் குமார் பன்சால், ராஜீவ் சுக்லா,தினேஷ் குண்டுராவ், மாணிக்கம் தாகூர்,ஹெச்கே பாட்டீல், தேவேந்திர யாதவ், விவேக் பன்சால், மணிஷ்சத்ரத், குல்ஜித் நாக்ரா, பக்த சரண்தாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.குலாம் நபி ஆசாத், பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், செயற்குழுவில் வழக்கமான உறுப்பினராகத் தொடர்கிறார்.இதற்கு முன்பாக செயற்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளராக இருந்த ஜிதின் பிரசாதா தற்போது நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மேற்கு வங்கம், அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு பொறுப்பாளராகவும் ஜிதின் பிரசாதா நியமிக்கப்பட்டுள்ளார்.

சோனியா காந்திக்கு கடிதம் எழுதியதில் முக்கியமான தலைவரான முகுல் வாஸ்னிக், மத்தியப்பிரதேசத்தின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மாநிலங்களுக்கு பொறுப்பாளராகஇருந்த அனுராக் நாராயன்சிங், ஆஷா குமார், கவுரவ் கோகாய்,ராம்சந்திர குன்தியா ஆகியோர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

;