tamilnadu

img

முடியை பிடித்து இழுத்த பாஜக ரவுடியை விரட்டிப்பிடித்த பெண் துணை ஆட்சியர்

ராஜ்கட், ஜன.22- மத்தியப் பிரதேசத்தில் தடை உத்தரவை மீறி போராட்டத் தில் ஈடுபட்ட பாஜகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினருடன் நடந்த மோதலை தடுக்க முயன்ற பெண்  துணை ஆட்சியரின் முடியை பிடித்து இழுத்து அராஜகத்தில் ஈடுபட்ட பாஜக ரவுடியை விரட்டிப்பிடித்து கன்னத்தில் அறை யும் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மத்தியப் பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவான போராட்டம் என்கிற பெயரில் பாஜகவினர் அராஜக- வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராஜ்கட் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. ராஜ்கட்டில் தடையை மீறி பாஜகவினர் போராட்டம் என்கிற பெயரில் காவல்துறையுடன் மோதினர்.  அப்போது தலையிட்ட துணை ஆட்சியர் பிரியா வர்மாவின்  தலைமுடியை ஒருவன் பிடித்து இழுத்தான். அவனை அந்த கூட்டத்துக்கிடையே விரட்டிப்பிடித்து கன்னத்தில் அறையும் கொடுத்தார். பெண் துணை ஆட்சியரின் இந்த துணிச்சல் வீடியோ பதிவாக சமூக ஊடகங்களில் வலம் வருகிறது. துணை ஆட்சியரின் துணிச்சலை பலரும் பாராட்டியுள்ளனர்.

;