ராஞ்சி:
பீமா கோரேகான் வழக்கில் சமூக ஆர்வலரும் 83 வயது பாதிரியாருமான ஸ்டான் ஸ்வாமியை, தேசியப் புலனாய்வு முகமை (National Investigation Agency - NIA) அதிகாரிகள் வெள்ளிக்கிழமையன்று ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியிலுள்ள அவரது வீட்டில் கைது செய்தனர்.“ஸ்டான் ஸ்வாமிக்கு தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து ஸ்டான் ஸ்வாமி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தார்; ஆகவேஅவரைக் கைது செய்துள் ளோம்” என்று என்ஐஏ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி கைதுக்கு, ராமச்சந்திர குஹா, பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.“ஆதிவாசி உரிமைகளுக் காக ஆயுள் முழுதும் போராடியவர் ஸ்டான் ஸ்வாமி. இதனால்தான் மத்திய அரசு அவரைமவுனமாக்க முடிவெடுத்துள் ளது. சுரங்க நிறுவனங்களின்லாபம்தான் ஆட்சியாளர் களுக்கு முக்கியம் ஆதிவாசிகளின் வாழ்வோ வாழ்வாதாரமோ அல்ல!” என்று எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான ராமச்சந்திர குஹா விமர்சித்துள்ளார். “பாதிரியார் ஸ்டான் ஸ்வாமி தற்போது ‘உபா’ (Unlawful Activities Prevention Act -UAPA) சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்முலம், மத்திய பாஜக அரசும், என்ஐஏ அமைப்பும் செய்யும் தவறுகள் எல்லையே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது” என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தன் ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்..இதனிடையே, கைது நடவடிக்கைக்கு முன்னர் பாதிரியார்ஸ்டான் ஸ்வாமி பேசியிருக்கும்வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “நான் பீமா கோரேகானுக்குச் சென்றதே இல்லை. ஆனால், என்னை அந்த வழக்கில் குற்றவாளியாகச் சேர்த்துள் ளனர். எனக்கு கடும் அழுத்தம்கொடுக்கின்றனர். மும்பை வரச்சொல்லி வற்புறுத்துகின்றனர்” என்று பாதிரியார் ஸ்டான் ஸ்வாமிமத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.