திருவனந்தபுரம்:
கேரளத்தின் பொது சுகாதார அமைப்பை வலுப்படுத்த மேலும் 75 குடும்ப சுகாதார மையங்களை செவ்வாயன்று முதல்வர் பினராயி விஜயன் திறந்து வைத்தார்.
ஆர்த்தவம் மிஷனின் ஒரு பகுதியாக புதிதாக கட்டப்பட்ட இந்த மையங்கள் காணொலிமூலம் திறக்கப்பட்டன. அப்போது பேசிய முதல்வர் இன்று சுகாதாரத் துறைக்கு ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க நாள் என்று கூறினார். அனைத்து மக்களுக்கும் சுகாதார சேவைகளை கிடைக்கச் செய்வதே இதன் நோக்கம். கோவிட் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இவை மிகவும் உதவியாக இருக்கும். ஆர்த்தவம் திட்டத்தின்முதல் கட்டத்தில் 170 ஆரம்ப சுகாதார நிலையங்கள் குடும்ப சுகாதார மையங்களாக மாற்றப்பட்டன.
இரண்டாம் கட்டமாக 503 ஆரம்ப சுகாதார நிலையங்கள் குடும்ப சுகாதார மையங்களாக மேம்படுத்தப்பட்டன. மீதமுள்ளவை விரைவில் திறக்கப்படும். கோவிட் நோயாளிகள் அதிகரிக்கும்போது உயிரிழப்புகள் அதிகரிக்கலாம். அதைத் தவிர்க்க அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வரவிருக்கும் நாட்களில் கட்டுப்பாடுகள் கண்டிப் பாக கடைபிடிக்கப்பட வேண்டும். அந்த விழிப்புணர்வுதான் சர்வதேச மட்டத்தில் நமது மாநிலத்திற்கு புகழைப் பெற்றுத் தந்தது. இதற்கு ஆரம்ப சுகாதார நிலையங்களின் பங்கு மிகப் பெரியது என்று முதல்வர் கூறினார்.புதிய மையங்கள் திருச்சூரில் -19, திருவனந்தபுரம் -12, மலப்புரம்-8, பத்தனம் திட்டா, பாலக்காடு- தலா 6, கொல்லம், கோழிக்கோடு- தலா 5, கோட்டயம், எர்ணாகுளம்- தலா 4, ஆலப்புழா-3, இடுக்கி, கண்ணூர்,காசர்கோடு-தலா 1.ஆரம்ப சுகாதார நிலையங்கள் குடும்ப சுகாதார மையங்களாக மாறும் போது, அந்த மருத்துவமனைகளின் செயல்பாடு முற்றாக மாறிவிடும். மதியம் 2 மணி வரை ஒரு மருத்துவர் இருந்த இடத்தில், மாலை 6 மணி வரைமூன்று மருத்துவர்கள் இருப்பார்கள். மருத்துவர்கள், மருந்தகம் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். உட்கட்டமைப்புகளில் ஒரு பாய்ச்சல் வேக வளர்ச்சி இருக்கும்.வாழ்க்கை முறை நோய்கள் முதல் மனச்சோர்வுமற்றும் நுரையீரல் நோய்கள் வரை அனைத்திற்கும் இலவச சிகிச்சை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.