tamilnadu

img

ஈரானில் இருந்து 4-வது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்பு

புதுதில்லி, மார்ச் 16-  ஈரானில் இருந்து  4-வது கட்டமாக 53 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாட்டிலிருந்து 389 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதல் கடுமையாக உள்ளது. இதையடுத்து ஈரானில்  உள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து முதல்கட்ட மாக, கடந்த செவ்வாய் மற்றும் 58 இந்திய  யாத்திரிகளும், 2-வது கட்டமாக வெள்ளிக் கிழமை 44 இந்திய யாத்திரிகர்கள் இந்தியா வுக்கு அழைத்து வரப்பட்டனர்.  பின்னர் 3-வது கட்டமாக சனிக்கிழமை 230 இந்தியர்கள் ஈரானிலிருந்து இந்தியா விற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள்  அனைவரும் ஜெய்சல்மரில் உள்ள இந்திய ராணுவ நல மையத்தில் தனிமைப்படுத்தப் பட்டு  கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில்,  4-வது கட்டமாக  52 இந்திய மாணவர்கள், ஒரு ஆசிரியர் உள்பட  53 இந்தியர்கள், ஈரானின்  டெஹ்ரான் மற்றும் ஷிராஸ் நகரிலிருந்து இந்தியா அழைத்து  வரப்பட்டுள்ளனர். திங்கள் அதிகாலை 3 மணிக்கு தில்லி விமான நிலையத்தில் தரை யிறங்கிய மஹான் ஏர் இந்தியா விமானம் மூலம் இந்தியா வந்தனர். அவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாருக்கு அழைத்துச்செல்லப்பட்டு ள்ளனர்.  இதுவரை ஈரானிலிருந்து 389 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.