tamilnadu

img

ஒடிசாவில் 4 நக்சல்கள் பலி

புவனேஸ்வர்:
ஒடிசாவில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 4 நக்சல் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில்உள்ள துமுடிமந்தா என்ற இடத்தில் காட்டுப் பகுதிகளில் நக்சல் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து இந்த பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்த தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி யுள்ளன. தாக்குதல் குறித்த முழு விவரங்கள்விரைவில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

;