tamilnadu

img

4 கோடி தடுப்பூசி தயார்.... இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்...

புதுதில்லி:
கொரோனா தொற்று தடுப்புக்கான கோவிஷீல்டு தடுப்பூசி 4 கோடி டோஸ் களை இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து முடித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தி பரவிவருகின்ற கொரோனா வைரஸ் தொற்றுக்குபல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவர்கள் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான பணியில்தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில்  இங்கிலாந்து நாட்டின் பிரபல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா என்றமருந்து நிறுவனமும் இணைந்து கூட்டாக கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்தியாவில் இந்த தடுப்பூசியை புனேயை சேர்ந்த சீரம் நிறுவனம் தயாரித்து, வினியோகிக்கும் உரிமையை பெற்றுள்ளது.

தற்போது சீரம் நிறுவனமும்  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இந்தியாவில் 15 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட மருத் துவ பரிசோதனையை நடத்துகின்றன.  1,600பேருக்கு இந்த மருத்துவ பரிசோதனையை நடத்துவதற்கான பதிவு முடிந்து விட்டது.இந்த தடுப்பூசி குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறுகையில், மருத்துவ பரிசோதனையின் நம்பிக்கைக்குரிய முடிவுகள், கோவிஷீல்டு தடுப்பூசி, கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு யதார்த்தமான ஒரு தீர்வாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இந்ததடுப்பூசி இந்தியாவில் மனித பரிசோதனையில் மிகவும் மேம்பட்ட தடுப்பூசி ஆகும்.2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உதவியுடன் சீரம் நிறுவனம் , இந்த தடுப்பூசியை விரைவில் இந்தியாவில் கிடைக்கச்செய்யும். ஏற்கனவே இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் அபாயகரமான உற் பத்தி மற்றும் கையிருப்பு உரிமத்தின்கீழ் 4 கோடி டோஸ் தடுப்பூசியை சீரம் நிறுவனம் ஏற்கனவே தயாரித்து முடித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. 

சீரம் நிறுவன தலைமை செயல் அதிகாரி பூனவாலா கூறுகையில், கொரோனாவைரஸ் பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முக்கிய பங்காற்றியுள்ளது. நோய்எதிர்ப்பு மற்றும் செயல்திறன் மிக்க தடுப்பூசியை உருவாக்குவதில் இந்தியாவை முன்னணியில் வைப்பதற்கு இந்த ஒத்துழைப்பு மேலும் உதவும் என்று குறிப்பிட்டார்.இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்தலைவர் டாக்டர் பலராம் பார்கவா கூறுகையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி உருவாக்கத்திலும், உலகளாவிய தயாரிப்பிலும்இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சீரம் நிறுவனம் தனது ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி வலிமையை தொடர்ந்து நிரூபித்துவருகிறது. உலகளாவிய பெருந்தொற்று நோய்க்கு எதிரான எங்கள் போராட்டத்தை மேம்படுத்துவதற்கு எங்கள் நிபுணத்துவம் மற்றும் ஆதரவை வழங்குவதற்கான எங் கள் பங்களிப்பு, இந்த கூட்டாண்மை ஆகும்என்று தெரிவித்தார்.