tamilnadu

img

30% மூடிக் கிடக்கின்றன; 75% சுகாதாரமில்லை; 72% தண்ணீரில்லை.... அரசுப் பள்ளிகளுக்கு மோடி அரசு கட்டித் தந்த 1.40 லட்சம் கழிப்பறைகளின் அவலம்...

புதுதில்லி:
அரசுப் பள்ளிகளின் 72 சதவிகித கழிப்பறைகளுக்கு தண்ணீர் வசதி இல்லை என்று மத்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (Comptroller and Auditor General of India - CAG), தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அரசுத் துறைகளின் திட்ட செயல்பாடுகள், அதற்கான வரவு - செலவுகளைத் தணிக்கை செய்து, அறிக்கை வெளியிடுவது மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தின் பணியாகும். இதன்படி தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (CAG) கடந்த புதன் கிழமையன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். ரபேல் போர் விமானக் கொள்முதல் குளறுபடிகள், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி ‘செஸ்’ வரி அபகரிப்பு உள்ளிட்ட விஷயங்களை அறிக்கையில் அம்பலப்படுத்தி இருந்தசிஏஜி, அரசுப்பள்ளி கழிப்பறைகளின் அவலத்தையும் வெளிச்சம் போட்டுள் ளார். இதுதொடர்பான அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:அரசுப் பள்ளிகளில் படிக்கும் சிறுவர் - சிறுமியர்களுக்காக, ஓராண்டிற்குள்சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் தனிக் கழிப்பறைகள் அமைப்பதற்கு 2014-ஆம் ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படியே நாடு முழுவதும் ரூ. 2 ஆயிரத்து 162 கோடி செலவில், 1 லட்சத்து 30 ஆயிரத்து 703 கழிப்பறைகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், அரசு பொதுத்துறை நிறுவனங்களால் கட்டப்பட்ட இந்த பள்ளிக் கழிப்பறைகளில் 75 சதவிகிதகழிப்பறைகள் சுகாதாரமாக பராமரிக்கப்படவில்லை. 72 சதவிகிதத்திற்கும் அதிகமானவற்றில் தண்ணீர் வசதி இல்லை. 30 சதவிகித கழிப்பறைகள், சேதம் மற்றும் பிற காரணங்களால் பயன்பாட்டிலேயே இல்லை.பள்ளி தனிக்கழிப்பறை திட்ட செயல் பாட்டை மதிப்பிடுவதற்காக, மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம், சுமார் 2 ஆயிரத்து 695 கழிப்பறைகளை ஆய்வு செய்தது. அப்போதுதான் அவற்றில் ஆயிரத்து 812 கழிப்பறைகள் முறையான பராமரிப்பு மற்றும் சுகாதாரம் இல்லாமல் இருந்ததைக் கண்டறிந்தது. பொதுத்துறை நிறுவனங்கள் கட்டிக்கொடுத்த கழிப்பறைகளை, அடுத்த 3 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரைஇலவசமாக பராமரிப்பதற்கான வருடாந்திர செலவுகளை அரசு பதிவு செய்துள்ளது. ஆனால், அவ்வாறு பராமரிப்புப் பணிகள் நடைபெற்றதாகவும் தெரியவில்லை.இவ்வாறு சிஏஜி தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார்.