புதுதில்லி:
நூறுநாள் வேலைத்திட்டம் எனப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையுறுதித் திட்டம் நீண்ட காலத்துக்கு தொடர்ந்து செயல்படுத்தப்பட மாட்டாது என மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.
2019-20 நிதியாண்டுக்கான வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி மானியக் கோரிக்கை மீதான விவாதம் மக்களவையில் புதனன்று நடைபெற்றது. இதில், கோரிக்கைகளுக்குப் பதிலளித்து, அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசியிருப்பதாவது:மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலையுறுதித் (100 நாள்)திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுஇந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளதாக சில உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். அவர்கள் கடந்தஆண்டுடன் இதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். கடந்த ஆண்டு ரூ. 55 ஆயிரம்கோடியாக இருந்த இந்த திட்டத்துக்கான ஒட்டுமொத்த ஒதுக்கீடு, நடப்பு நிதியாண்டுக்கு ரூ. 60 ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டம் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இப்போது,99 சதவிகித பயனாளிகளுக்கான கூலி, அவர்களுடைய வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத் தப்படுகிறது. இதனால், இடைத் தரகர்கள் குறுக்கிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அதேநேரம் ஏழைகளுக் கான இந்த திட்டம், நீண்ட காலத்துக்கு தொடர்ந்து செயல்படுத் தப்படமாட்டாது. ஏனென்றால், வறுமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.இவ்வாறு தோமர் குறிப்பிட்டுள்ளார்