சென்னை,மே 26- கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனைக்காக தென்கொரியா வில் இருந்து மேலும் 1.50 லட்சம் பி.சி.ஆர்.கருவிகள் செவ்வாயன்று தமிழகத்திற்கு வந்தன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான அளவில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் கொரோனா நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதி களில் சோதனைகளை விரைவுப் படுத்துவதற்காக தென்கொரியாவில் இருந்து 10 லட்சம் பி.சி.ஆர். கருவி களை வாங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன்படி கடந்த 17 ஆம் தேதி 1 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தமிழகத்திற்கு வந்தன. இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்காக தென்கொரியா வில் இருந்து மேலும் 1.50 லட்சம் பி.சி. ஆர்.கருவிகள் செவ்வாயன்று தமிழ கம் வந்தன. இந்த கருவிகள் தமி ழகத்தில் உள்ள பல்வேறு மருத்துவ மனைகளுக்கு தேவையின் அடிப்படை யில் பகிர்ந்து வழங்கப்படும். இத னால் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப் படும். இதுவரை பிசிஆர் கருவிகள் மூலம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 450 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 68 பரிசோதனை மையங்களில் பி.சி.ஆர். கருவிகள் மூலம் சோதனை செய்யப்படுகிறது. இதில் 41 அரசு மருத்துவமனைகள், 27 தனியார் மருத்துவமனைகளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது.