tamilnadu

img

மேற்குவங்கம் திரிணாமுல் – பாஜக மோதலில் 4 பேர் பலி

கொல்கத்தா, ஜுன் 9- மேற்கு வங்கத்தில் சனியன்று இரவு (ஜுன் 8) திரிணாமுல் காங்கிரஸ் – பாஜகவினரிடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மேற்குவங்க அரசியலை வன்முறைமயமாக்கும் திரிணாமுல் - பாஜகவின் அட்டூழியங்களையும் வன்முறைகளையும் கண்டித்து இடது முன்னணி சார்பில் பேரணி நடை பெற்றது. மேற்குவங்க மாநிலத்தில் அதிகாரப்  போட்டி மற்றும் தேர்தல் வன்முறை களின் தொடர்ச்சியாக திரிணாமுல் – பாஜகவினரிடையே மோதல் நீடித்து வருகிறது. வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் நடந்த மோதலில் 3 பாஜக ஊழியர்களும், ஒரு திரிணாமுல் காங்கிரஸ் ஊழியரும் கொல்லப்பட்ட னர். இதற்கு முந்தைய நாள் சிபிஎம் ஊழி யர் ஒருவரை திரிணாமுல் குண்டர் கள் படுகொலை செய்தனர்.  இந்நிலையில், சந்தேஷ்காலி பகுதியில் உள்ள நைஜாத்தில் சனியன்று  இரவு 7 மணியளவில் மோதல் ஏற் பட்டது. நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிபெற்ற பாஷிராத் தொகுதிக்கு உட்பட்ட பகுதி யாகும் இது. ஆனால், மோதல் ஏற்பட்ட பஞ்சாயத்தில் பாஜக 144 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தது.      திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கயாம் மொல்லா (26) வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த மோதலில் பிரதீப் மண்டல், சுகாந்த் மண்டல், தவன் மண்டல் ஆகிய பாஜக ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 5 பேரை காணவில்லை எனவும் புகார்  தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஊழியரது கடையில் பூத் கமிட்டி கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த பாஜக தொண்டர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட வேண்டும் என பாஜகவுக்கு தாவிய முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் முகுல்ராய் கோரிக்கை விடுத்துள்ளார். மாநில பாஜகவிட மிருந்து அமித்ஷா அறிக்கை கேட்டுள்ள தாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இடது முன்னணி பேரணி
 

இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மேற்கு வங்கத்தில் திரி ணாமுல் -  பாஜக குண்டர்கள் நடத்தும் தாக்குதல்களுக்கும் வன்முறைகளுக் கும் எதிராக கொல்கத்தாவில் ஞாயி றன்று இடது முன்னணி சார்பில் பேரணி நடைபெற்றது. மாநிலம் முழுதும் நடக்கும் வன்முறைகளை தடுக்க காவல்துறையும், அரசும் தலையிட வேண்டும் என இடது முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.