tamilnadu

img

புதுச்சேரி தியாகிகளுக்கு அஞ்சலி

புதுச்சேரி, ஜூலை 30- ஆசிய கண்டத்திலேயே 8 மணி நேர வேலை உரிமையை பெற்றுத் தந்த ஜூலை 30  தியாகிகளுக்கு  அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி,  புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள சுதேசி பஞ்சாலை வளாகத்தில் நடைபெற்றது. சிஐடியு பிரதேச செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிபிஎம் பிரதேச செய லாளர் ராஜாங்கம் தமிழ் மாநிலக்குழு உறுப்பி னர் பெருமாள், சிஐடியு நிர்வாகிகள் குண சேகரன், பிரபுராஜ், மதிவாணன், ஆவணி அப்பன், கலியமூர்த்தி, ராமலிங்கம், மனோ கர் உட்பட திரளான தொழிலாளர்கள் தியாகி களின் சிலைக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல் ஏஐடியூசி உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில்  அஞ்சலி செலுத்தப்பட்டது.