ஸ்ரீநகர்,ஜூலை 5- ஜம்மு-காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். சோபியான் மாவட்டத்தில் இமாம் சாஹிப் பகுதியில் உள்ள பட்போர்-நர்வானி என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையின ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரை கண்டதும் அங்கு பதுங்கி யிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கி னர். பாதுகாப்புப் படையினரும் சரமாரியாக சுட்டனர். இந்த தாக்குதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தை சேர்ந்த சமீர் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனிடம் இருந்து ஆயுதங்க ளும், வெடிமருந்தும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அதி காரிகள் தெரிவித்தனர்.