கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்ற வழிகாட்டுதலை ரிசர்வ் வாங்கி பிப்ரவரி மாதம் வழங்கவுள்ளதாக பல பொருளாதார வல்லுநர்கள் எதிர்பாக்கிறார்கள்.
இந்திய ரிசர்வ் வங்கி திங்களன்று இரு மாத மதிப்பாய்வை மறுபரிசீலனை செய்தது. ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு செப்டம்பர் 29 முதல் 3 நாட்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி ஒரு அறிக்கையை வெளியிடவிருந்தது. எம்.பி.சி.யின் மறுஆய்வுக் கூட்டத்தின் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படுகிறது என மத்திய வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவிற்கும் அறிக்கையில் முக்கிய கொள்கை விகிதங்கள் குறித்து நிலையை பராமரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், பல பொருளாதார வல்லுநர்கள் பிப்ரவரி முதல் கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொருளாதாரம் எவ்வாறு உள்ளது என்பதற்கான வழிகாட்டுதலை ரிசர்வ் வாங்கி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராய்ட்டர்ஸ் இது குறித்து கருத்துக் கணிப்பில் 66 பதில்களின் படி வர இருக்கும் கொள்கை மறு ஆய்வுக்கும் பிறகு ரெப்போ விகிதம் 4.0 சதவீதமாக மாறாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதில், ஜனவரி - மார்ச் காலாண்டு வரை எந்த விதமான புறக்கணிப்புகளையும் காணவில்லை, ரிசர்வ் வங்கி 2021 இறுதி வரை நிறுத்தி வைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளனர். கடந்த காலாண்டில் 23.9 சதவிகிதம் பொருளாதாரம் குறைந்துள்ளது. இதனால், இதனை அதிகரிக்க சில்லறை பணவீக்கத்தை நிர்வகிக்க வேண்டும். மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா தொற்று நோய்க்கு பதிலளிக்கும் வகையில் இது வரை 115 புள்ளிகளால் குறைக்கப்பட்டுள்ளது.