புதுச்சேரி, மே 12 - புதுச்சேரிக்கு நிதி உதவி வழங்க வலியுறுத்தி மே 14 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீடுகளில் இருந்தபடியே கோரிக்கை முழக்க ஆர்ப்பட்டம் நடைபெறும் என்று பிரதேச செயலா ளர் ஆர்.ராஜாங்கம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப் பட்ட ஊராடங்கல் மக்கள் தவிக்கின்றனர். மாநிலங்க ளோடும், மக்களோடும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தருணத்தில் மத்திய பாஜக அரசு சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற துடிப்பது பொறுத்தமற்ற அனுகுமுறையாகும். வாழ்வாதாரம் இழந்த மக்களை பாதுகாப்பதும், கொரோனா நோய் எதிர்ப்பு போரில் நேரடியாக களத்தில் உள்ள மாநிலங்களுக்கு நிதி வழங்குவதும் அவசியமா கும். ஆனால் மத்திய அரசின் செயல்பாடு மிகவும் கவலையளிப்பதாகவே உள்ளது.
புதுச்சேரி மக்களுக்கு மிகசொற்பமான தொகையே நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மக்களுக்கான நிவாரணங்கள் வழங்குவதிலும் மத்திய அரசு இறுக்கமான மனநிலையோடு செயல்ப டுகிறது. ஆகவே, வருமானவரி செலுத்தாத அனைத்து குடும்பங்க ளுக்கும் மாதம் ரூ.7500 வீதம் 3 மாதகாலத்திற்கு வழங்க வேண்டும். மேலும் ஏழை குடும்பங்களுக்கு நபருக்கு இலவசமாக 10கிலோ தரமான அரிசி வழங்க வேண்டும். பிஎம்-கேர் நிதியிலிருந்து கொரோனா நோய் தடுப்பு மற்றும் மருத்துவமனை கட்டமைப்புகளை வலுப்படுத்திட நிதி உதவி வழங்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு, மானியம், கொடை, 7வது ஊதி யக்குழு அமுலாக்க நிதியினை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் பட்ஜெட் பற்றாக்குறை மற்றும் நிதி மேலாண்மை சட்டத்திலிருந்து விலக்களித்து கடன் பெறும் உச்சவரம்பை 5 விழுக்காடாக உயர்த்திட வழிவகை செய்திட வேண்டும்.
ஆட்சியில் குழப்பத்தையும், நிர்வாகத்தில் பிள வையும் ஏற்படுத்தும் துணைநிலை ஆளுநரை திரும்பப்பெற வேண்டும். கிராமப்புற மக்களுக்கு 100நாள் வேலையை முழுமையாக வழங்கிட முழு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நகர்புற ஏழைகளுக்கும் வேலை அளித் திட இத்திட்டத்தை விரிவுபடுத்திட வேண்டும். ஊரடங்கு காலத்தில் நிறுவனத் தொழிலாளர்க ளுக்கு முழுச் சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அரசு மற்றும அரசு சார்பு, தன்னாட்சி அமைப்புகளில் வேலைசெய்யும் ஊழியர்களுக்கு நிலுவைச்சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். மாநில அரசு மக்கள் மீது வரிச்சுமையை ஏற்று வதை கைவிட வேண்டும். கொரோனா நோய் தடுப்பு போரில் களத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலி யர்கள், ஊழியர்களுக்கு தற்காப்பு கவசம், கையுரை, முககவசம், உள்ளிட்ட சாதனங்கள் வழங்கிட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 14ஆம் தேதி காலை 10 மணிமுதல் 10.30 மணிக்குள் கட்சி ஊழியர்கள் அவரவர் வீடுகளில் இருந்து கண்டன முழக்கப் போராட்டத்தை நடத்துவார்கள். இந்த இயக்கத்தில் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.