tamilnadu

img

டிஆர்டிஓ உருவாக்கிய என்ஏஜி ஏவுகணை இறுதி சோதனை வெற்றி 

டிஆர்டிஓ உருவாக்கிய என்ஏஜி ஏவுகணை இறுதி சோதனை வெற்றியடைந்துள்ளது. தற்போது இந்திய ராணுவத்திற்குள் இணைக்க தயாராக உள்ளது.

எதிரி டாங்குகள் மற்றும் அவற்றின் உறுதியான கவச வாகனங்களை தகர்க்க இந்த ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு, தற்போது இதன் சோதனை வெற்றியடைந்துள்ளது. இந்திய பாதுகாப்புத் துறையில் உள்நாட்டில் தயாரிக்க ஒரு பெரிய ஊக்கமாக இந்த என்ஏஜி (நாக்) ஏவுகணை உருவாக்க, அதன் வழிகாட்டல் மூலம் இறுதி சோதனை வெற்றியடைந்துள்ளது. டிஆர்டிஓ இந்த சோதனை காலை 6.45 மணியளவில் ராஜஸ்தானில் உள்ள போக்ரான் துப்பாக்கி சுடும் எல்லையில் மேற்கொள்ளப்பட்டது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.  

இந்த ஏவுகணையானது 4 முதல் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடியதாகும். இது மூன்றாம் தலைமுறை ஏவுகணையாகும். இரவு பகல் முழுவதும் எதிரி அமைப்புகளை திறம்பட அளிக்கக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஏடிஜிஎம்கள் 2.5 கி.மீ.க்கு மேல் தடைபடாமல் தாக்கக்கூடிய திறனை கொண்டுள்ளது. இராணுவம் தற்போது இரண்டாம் தலைமுறை மிலன் 2 டி மற்றும் கொங்கூர் ஏடிஜிஎம்களைப் பயன்படுத்துகிறது. எதிரி அமைப்புகளை முன்னேற்றுவதை நிறுத்துவதற்கு முக்கியமான மூன்றாம் தலைமுறை ஏவுகணைகள் தேவைப்படுகிறது.

இந்திய ராணுவத்திற்கு 300 நாக் ஏவுகணைகள் மற்றும் 25 நாமிகாக்கள் வாங்குவதை பாதுகாப்பு அமைச்சகம் 2018 ல் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.