புதுச்சேரி, மார்ச் 2- எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து புதுச்சேரியில் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரதேசத் தலைவர் வி.சந்திரா தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதாசுந்தரராமன், தமிழ் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா ஆகியோர் கண்டன உரையாற்றினர். பிர தேசச் செயலாளர் இ.சத்தியா, துணைத் தலைவர் இளவரசி உட்பட திரளான பெண் கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். நியாயவிலைகடைகளில் இலவச அரிசியே மீண்டும் வழங்க வேண்டும், மூடிய பஞ்சாலை களை உடனே திறக்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.