tamilnadu

img

கேரளா : புத்துமலையில் பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு

வயநாடு, ஆக.11- வயநாடு மாவட்டம் புத்துமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் காணாமல்போன மேலும் ஒருவரது சடலம் ஞாயிறன்று மீட்கப்பட்டது. இதோடு பலி எண்ணிக்கை பத்தாக உயர்ந்தது. மீட்கப்பட்ட சடலம் புத்துமலை தோட்டத்தில் வசிக்கும் பன்னீர் செல்வத்தின் மனைவி ராணி என தெரியவந்துள்ளது.     60 பேர் வரை இந்த பகுதியில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.  காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புத்துமலை இயற்கை அழகை ரசித்தபடி வயநாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான சுசிப்பாறைக்கு செல்லும் வழியாகும். இந்த சாலை துண்டிக்கப்பட்டு மலையிலிருந்து வெள்ளம் ஓடிக்கொண்டிருக்கிறது. இங்குள்ள பாலமும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. புத்துமலை, பச்சக்காடு பகுதிகளில் சுமார் 1500 பேர் வசிக்கின்றனர். சுகாதார நிலையம், பள்ளக்கூடம், கிளப், விளையாட்டுத்திடல் உள்ளிட்டவை இப்பகுதியில் இருந்தன. அவை அனைத்தும் நிலச்சரிவால் நாசமாகிவிட்டன. நிலச்சரிவு ஏற்படுவதற்கு சற்றுமுன்பு இங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் துயரம் தடுக்கப்பட்டது.