tamilnadu

இலவச அரிசி வழங்க தடைபோடும் ஆளுநர் சட்டப்பேரவையில் புதுவை முதல்வர் சாடல்

புதுச்சேரி, செப். 5- புதுச்சேரியில் இலவச அரிசி வழங்குவ தற்கு துணை நிலை ஆளுநர் மீண்டும் தடைப்  போடுவதாக முதல்வர் நாராயணசாமி சட்டப் பேரவையில் குற்றம் சாட்டினார். புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்  தொடரில் வியாழனன்று (செப்.5) நடந்த கேள்வி நேரத்தில் பேசிய  போது மாஹே  தொகுதி உறுப்பினர் பேராசிரியர் ராமச்சந்திரன் , “ஆரம்பத்தில் 20 கிலோ  இலவச அரிசி 7 மாதங்களுக்கு வழங்கப் பட்டது. பின்னர் 4 மாதங்களுக்கு சிவப்பு  குடும்ப அட்டைதாரர்களுக்கு 15 கிலோ  இலவச அரிசி மற்றும் 5 கிலோ கோதுமை யும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 5 கிலோ  அரிசி, 5 கிலோ கோதுமையும் வழங்கப் பட்டது. பின்னர் இலவச அரிசிக்கு இணை யாக 5 மாதங்கள் மட்டுமே மாஹே பிராந்தி யத்தில் பணம் வழங்கப்பட்டது. அரிசி வழங்கு வது ஏன் நிறுத்தப்பட்டது? என்றார். அரிசி வழங்க தடையாக உள்ளது யார்?  என்று உறுப்பினர்கள் அன்பழகன், சிவா வும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த சமூக நலத்துறை அமைச்சர்  கந்தசாமி,“ 17 மாதம் அரிசியும் 5 மாதம்  பணமாக வழங்கப்பட்டது.  அரிசி  வழங்குவதை ஆளுநர் தடுக்கிறார்” என்றார். தேர்தலில் 30 கிலோ இலவச அரிசி வழங்கு வதாக அறிவித்தோம். ஆனால் 20 கிலோ  வழங்க முடிவு செய்து 2016-17 ஆம் ஆண்டு  நிதியை ஒதுக்கினோம். 6 மாதம் அரிசி வழங்  கப்பட்டது. பின்னர் அரிசி வழங்க வேண்டாம்,  பணமாக கொடுத்துவிடுங்கள் என்று ஆளு நர் கோப்பை திருப்பி அனுப்பினார்.  இதனைத் தொடர்ந்து, அரிசி வழங்க அமைச்சரவையில் முடிவு எடுத்து கோப்பை  அனுப்பினோம். ஆளுநர் தற்காலிகமாக அரிசி வழங்க ஒப்புக் கொண்டார். 4 மாதத் திற்குப்பின் மீண்டும் அரிசி வழங்குவதற்கு தடை விதித்தார். அரிசி வழங்குவதற்கு ஆளு நர் தடையாக இருக்கிறார். அதற்கான ஆதார மும் உள்ளது என்று முதலமைச்சரும் தெரிவித்தார்.